Sunday, February 12, 2012

சக்தி செல்வகணபதி - 1


சக்தி செல்வகணபதி









நகரத்தின் மிச்சத்துடன் வாசனையுடன் ? தனக்கேரிய தனித்தவமான மண் வாசனையுடன் கூடிய கிராமிய கொஞ்சம் கலந்த சிற்றூர். நகர நாகரீகத்தின் தார் நனைக்கப்படாத கிராமிய செம்மணல் சாலைகள், கூர்மையான கப்பிகளில் கால்தடம் பதிக்க நடக்கும் சிற்றூர் அது. அன்றைய தினம் அவ்வூர் பேரூந்து வசதிகளை பெற்றிருக்கவில்லை... ஏழ்மை நிறைந்த குடிசைகள்... நடுத்தரங்களின் நாட்டு ஓடுகள் வசதி படைத்தவர்களின் சுண்ணாம்பு காரை ஒன்றிரண்டு ஏட்டு பூசிய வீடுகள். இது தான் அன்றைய அலிவலம்.
தேர்தல் பிரச்சார வாகனம் வேகமாக ஊருக்குள் நுழைந்தது. அரசியல் பிரச்சார ஓசை ஊரைக் கூட்டியது. மக்களின் ஓட்டு வங்கியை குறி வைத்து தினம் ... தினம் தேர்தல் பிரச்சார வாகனங்கள் ஊருக்குள் வந்து, போய்க் கொண்டு தான் இருந்தன. காற்றில் பிரச்சார வேன்களில் இருந்து வீசப்படும் துண்டு பிரசுரங்களுக்கு சிறுவர்கள் வேனை பின்தொடர்ந்து ஓடினார்கள். அந்தச் சிறுவனைத் தவிர. அந்த சிறவன் மட்டும் ஏனோ அந்த பிரச்சார வேனை வெறுப்புடன் பார்த்தான் ஏதோ எதிரியை பார்க்கும் தோரணையுடன். சிறுவர் கூட்டம் வண்ண வண்ணத் துண்டறிக்கைகளை சேகரித்தது. ஒரு சிறவன் மட்டும் வாசல் படியில் அழுத்தமாக  பிரச்சார வாகனத்தை முறைத்துப் பார்த்தபடி உட்கார்ந்திருக்கும் செல்வகணபதி அருகில் வந்தான். டேய்... செல்வகணபதி ஒனக்கு நோட்டீஸ் வேண்டாமா என்றான்.







வேணாம் ... எங்க கட்சி வேன் வரும். நான் வாங்கிக்குவேன். கருப்பு சிவப்பு கொடி பறந்த பிரச்சார வேன் அந்த நீண்ட மண் சாலையில் புழுதி கிளப்பி, போவதை வெறுப்புடன் பார்த்தான் அச்சிறுவன். அவனுக்குள் காந்தியம் வேறூன்றி நின்றது. அன்றைய காலத்தில், ஆத்தீகமும், நாத்தீகமும் உறுத்தும் எதிர்முனையாய் இருந்தாலும் தேர்தலில் கை கோர்த்திருந்த காலம் தி. . வின் ஆதரவுடன் காங்கிரஸ் களம் இறங்கி இருந்தது தி.மு.. ஜன சங்கம் , சுதந்திர கட்சி கம்யூனிஸ்ட்கள் ஓரணியில் நின்று கரல் உயர்த்திய காலம். காமராஜரின் உருவமும், காங்கிரசின் தியாகமும். செல்வகணபதி எனும் அந்த ஏழைச் சிறுவனுக்குள் அன்று விழுந்த விதை மெல்ல அரும்பி முளைவிடத் துவங்கியது. அவனின் போராட்டக் காலத்தின் தியாகங்கள் துளிர்விட்ட தருணங்கள் அது.

சக்தி செல்வகணபதி - 2


2



சிறுவன் செல்வகணபதியின் வாழ்க்கையில் இளமைக்காலம் இனிமையாய் நகரவில்லை ... வறுமைகளின் வலி உணர்ந்த வாழ்க்கை ... அப்பா தெட்சிணாமூர்த்திக்கும், அம்மா மீனாட்சியம்மாளுக்கும் மகன் மேல் தனிப்பெரும் அன்பு உண்டு.
அது சகோதரர்கள் சாமிநாதன் பேரிலும், முருகானந்தம் பேரிலும், சகோதரிகள் சுசீலா, திலகா பேரில் உள்ளது போன்ற அன்பின் மிகுதி.
செல்வகணபதியின் இளமைத்தடம் உணர்ந்த அலிவலம் பள்ளி, அவரது விரல் பிடித்து செல்வகணபதிக்கு அகரம் சொல்லி தந்தது ஆரம்பப் பள்ளி.
பள்ளிப் பருவம் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இனிமை நிறைந்தது தான். ஆனால் செல்வகணபதி போன்றவர்களுக்கு கசப்புடன் கூடிய இனிமையானது. ஒரு மனிதனின் வளர்முகப் பருவத்திலேயே கொடுமையானது வறுமைக்குள் சிக்கிக் கொள்வது. மிகப்பெரும் துரதருஷ்டமாகும். அது அவருக்கும் நிகழ்ந்தது. சாதனைகளை தொட்டு எட்டிப் பிடித்திட சோதனைகளை கடந்து தான் தொடர்ந்து நடந்து வருவதை உணர்ந்திருந்தார் அவர்.



பள்ளியில் ஆசிரியரின் பார்வைக்கு மண்டையில் ஏறாத மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்களில் நமது செல்வகணபதியும் ஒருவன். தினசரி ஆசிரியரின் பிரம்பின் நீளம் இவனாலேயே தீர்ந்து போகும். தினசரி அடி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் செல்வகணபதி.
வீட்டின் நெருக்கடியையும், சிரமத்தையும் நன்கு உணர்ந்திருந்தான் செல்வகணபதி. ஜவுளிக்கடைகளில் தொங்கும் வண்ண வண்ண சட்டைகள் மேல் கொள்ளை ஆசை வரும். அவனுக்கு அன்றைய நிலையில் ஆனால் பொருளாதாரம், அதை எட்டிப் பிடித்திட இடம் தரவில்லை. சிறு வயதில் பள்ளிச் சீருடை தான் அவனுடைய விழாக்கால ஆடையாக இருந்ததுள்ளது.
அவனது வீட்டில் தனியாக வண்ண ஆடைகள் எடுக்க மாட்டார்கள். வறுமையின் பொருட்டு பள்ளிச் சீருடையே அவனின் ஆடைக்கனவுகளை நிரப்பி விட்டது. இளமையில் அதுவும் தாய்மாமன் நாராயணசாமி செட்டியார், லெட்சுமண செட்டியார் இருவர் வீட்டில் இருந்து வரும் சீருடை எத்தனை நாள் உழைக்கும். அவனது கால் சராயி நைந்து கிழிந்து பின்பக்கம் போஸ்ட் பாக்ஸ் என சக மாணவர்கள் கிண்டலடித்தாலும் அந்த ஆடையை விசிறி எறிய அவனுக்கு வறுமை இடம் தரவில்லை.



இளம் வயதில் அவன் அணிந்த சீருடைகளில் தையல் பார்க்காத இடமேயில்லை எனலாம். இனிமையான அவன பள்ளி நாட்களில் சில துடிப்பாக பள்ளிகளில் நடக்கும் சில இனிமயான நிகழ்வுகள் மட்டும் அவனை சந்தோ­ப்படுத்தியிருக்கின்றன.
அப்பொழுதெல்லாம் பள்ளிக்கூடத்தில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைச்சர்களை நியமிப்பது உண்டுமுதலமைச்சர், உணவமைச்சர், தோட்ட அமைச்சர், சுகாதார அமைச்சர் என மாணவர்களை உற்சாகப்படுத்தி பள்ளிக் கடமைகளில் முதன்மைப்படுத்துவார்கள். அப்படிப்பட்ட சூழலில் செல்வகணபதி உணவமைச்சராகச் செயல்பட்டிருக்கிறார்.


அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை, பால் பவுடர்கள், பனை எண்ணைகளில் தயாராகும் புதிய உணவில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் அமர்ந்து உணவை உட்கொள்ள இந்த அமைச்சர் பதவி வழிகாட்டியிருக்கிறது அன்றைய தினங்களில் அவருக்கு.




அந்த காலகட்டத்தில் சென்னை மாகாணம் என்பது பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.ஒட்டுப் போட்ட கால்சராயுடன் புத்தக நறுமணம் உணர்ந்தான் செல்வகணபதி. கூரைப் பள்ளியில் அகரம் அறிந்தவன். தார் நனைக்கப்படாத சாலை கடந்து ஆரூருக்குள் மெல்ல அடியயடுத்து வைத்தான் நமது செல்வகணபதி. செருப்பு இல்லாத வெற்றுக் கால்களுடன் பிஞ்சுப் பாதங்கள் தினம் பயணம் உணர்ந்தது. அப்பொதெல்லாம் குடும்பத்தின் வறுமைச் சுமைகளில் தன்னையும் திணித்துக் கொள்ளும் முனைப்பு அவனுக்கு இருந்தது.
பொங்கல் திருநாளில் திருவாரூர் வீதிகளில் கைகளில் மஞ்சள் தொடர் போராட்டம் மனதுள். அந்த செயல் வேகம் அவனை வேலைக்குப் போக தூண்டியது. அப்பாவின் நண்பர் நாராயணசாமி செட்டியாரின் சேகர் வாட்ச் கம்பெனியில் வேலைக்கு சென்றான். சேகர் வாட்ச் கம்பெனியின் சிறப்பு. அதன் உரிமையாளர் நாராயணசாமி செட்டியார் அவர்கள் மக்களின் நன்மதிப்பை சிறைபிடித்திருந்தார் கடிகார வணிகத்தில் ...
செல்வகணபதி நாராயணசாமி செட்டியாரிடம் வேலைக்கு அமர்ந்தார். அப்பொழுது தான் நண்பர் ஜெயபாலின் நட்பு கிடைத்தது. ஜெயபால் செல்வகணபதிக்கு தேடிக் கிடைத்த பெரும் செல்வம். ஜெயபால் அழுத்தமான அன்பின் வடிவம்.
ஜெயபால் மூலமே டீ, காஃபி, சாப்பிடும் பழக்கம் செல்வகணபதியிடம் இருந்து சுத்தமாகத் தொலைந்து போனது ... அன்று முதல் இன்று வரை.
ஜெயபாலின் நட்பு, நகமும், சதையும் என்று சொல்லி வளர்ந்தபின் வெட்டி வீசும் வி­யங்களுடன் ஒப்பிட முடியாது. இரத்தமும், தசையுமான நட்பு அது. செல்வகணபதிக்குள் காங்கிரஸ்காரன் வளர்ந்து செழித்துக் கொண்டிருந்தான்.


அண்ணாத்துரையின் ஆட்சி இரண்டாண்டு காலம் தொடர்ந்து நடைபெற்று ... அண்ணாவின் மொழிக் கொள்கை, கலப்பு மணம், மாநில சுய ஆட்சி, மத்தியில் கூட்டாட்சி எனக் கொள்கையில் ஓங்கிய காலம். அண்ணா 1969-ம்  ஆண்டு பிப்ரவரி 3- ஆம் தேதி தமிழகம் விட்டு மண்ணுலகம் சென்று விட்டாலும் மாற்றுக் கட்சியின் மாபெரும் தலைவரின் மரணம் செல்வகணபதியை சற்று சங்கடம் தான் படுத்தியது.
(இனி அவன், இவன் எனும் ஏக வசனம் வேண்டாம் . அடுத்த அத்தியாயங்களில் அடக்கியே வாசிப்போம். ஏனெனில் தோளுக்கு வளர்ந்த பிள்ளையாகி விட்டார் செல்வகணபதி)

சக்தி செல்வகணபதி - 3







3
ஏழ்மை தொடர்ந்து செல்வகணபதியின் வாழ்க்கையில் நழுவி அவரின் சிறு வயது போராட்டம் தொடர்ந்தது. குடும்பச் சுமைகளை அவரின் தோள்கள் சுமந்தன. பொங்கல் திருவிழா நாட்களில் இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து சுமந்தன. அவருடைய சொந்த முதலீட்டில் அவருடைய கைகளும், தோள்களும் இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்தை சுமக்கவில்லை. கண்ணாடிக் கடை வைத்து நடத்தும், அண்ணாமலை செட்டியார் சந்தையில் இருந்து மொத்தமாக வாங்கி, இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார். சுமந்து திருவாரூர் நகர வீதிகளில் நடந்திருக்கிறார். தனது வாழ்நாளின் ஆரம்ப கால போராட்டங்கள் அவரை உறுதிப்படுத்தின.

போலீஸ்காரர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் துரத்திட தோள்கள் மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்தை சுமக்க நடந்திருக்கிறார். பொங்கல் காலங்களில் மற்றவர்கள் கண்களுக்கு அவை மஞ்சள் கொத்து. ஆனால் அவர் மனதுக்கு அவர் தோள் சுமந்தது குடும்பச் சுமை. தாண் விளையும் ஆரூர் நகருக்கு பள்ளிப்படிப்பை  தொடர வந்த செல்வகணபதியை சூழ்நலை துரத்திக் கொண்டே இருந்தது. ஆனால் பள்ளிக்கூட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இட்டு குடும்பச்சுமைகள் சுமந்து வாழ்வை தொடர்வதே சுகம் என நம்பி தொடர்ந்த செல்வகணபதி இப்படி எண்ணினார் நாளெல்லாம் தைப்பொங்கல் தொடரக்கூடாதா ? ஆனாலும் அடுத்தப் பணிக்கு தன்னை ஆயுத்தமாக்க செல்வகணபதி தன்னைமுன்னிலைப்படுத்த தீர்மானித்தார்.
அதன்படி அப்பாவின் நெருங்கிய நண்பரான நாராயணசாமி செட்டியார் அவர்களின் வாட்ச் கம்பெனியில் அவரின் பணி தொடர்ந்தது. கடிகார முட்கள் போல ... வாழ்க்கை சுழன்றோடத் துவங்கியது. அன்று முதல் செல்வகணபதி உள்ளும், வெளியும் மகிழ்ந்துப் போனார். அவர் தந்தையின் நண்பர் நாராயணசாமி செட்டியாரின் வாட்ச் கம்பெனி தான் அவரின் கடிகார உலகின் முதல் எழுத்து எனலாம். தினமும் பத்து பைசா சம்பளத்தில் நழுவி ஓடியது அவரின் ஆரம்ப நாட்கள். மகன் காலம் காட்டும் வாழ்வில் எதிர்காலத்தில் கரைந்துப் போக இது தான் ஆரம்பம் என்கிற முடிவில் இருந்தார் தந்தை. ஆனால் செல்வகணபதிக்கு பத்து பைசா என்பது அன்றைய தினம் பெரும் பணம் என்பதே பெருண்மை. அந்த பத்து பைசாவில் அதிகமான கனவுகள் சுழன்றோடும் காலமது. சேகர் வாட்ச் கம்பெனி அவருக்கு தொடர்ந்த பணியிடமாக ஆகிவிடும் எனும் நம்பிக்கை ஏற்பட்டபோது தான் திடீர் என அது நிகழ்ந்தது.
அதன் உரிமையாளருக்கு தினசரி 10 பைசா சம்பளத்தை உயர்த்தவோ, அதையே நீட்டித்து சிறுவனை  தொடர்ந்து தனது கடையில் பணியாற்றிடவோ யோசிப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். கடுமையான வசை மொழிகளைக் கொண்டு  சிறுவன் செல்வகணபதியை திட்டினார் செட்டியார். வேலையை விட்டுப் போக சொல்லும் சில சந்தர்ப்பங்களை  தானே உருவாக்கினார்.










சிறுவன் கண்களில் நீரை தேக்கிக் கொண்டு கனவுகள் உடைந்துப் போன கவலையுடன் நடந்தான். வீடடிற்கு கீழே குனிந்தபடி நடந்த சிறுவன் முன் சிந்தனையைக் களைத்து நிமிர்த்தியது அந்தப் பெண் குரல். எதிரில் உரிமையாளர் நாராயணசாமி செட்டியாரின் மனைவி கமலாம்பாள் நின்றிருந்தார்.
ஏன்டா செல்வகணபதி அழுவுற !
ஐயா வேலைக்கு வேண்டான்னுட்டாங்க... என்ற செல்வகணபதியையே பார்க்கிறார் அம்மையார். அதுக்கா அழுவுற ?
அழுகையோடு மேலும் கீழும் தலையசைத்து ஆமோதிக்கிறான் சிறுவன்.
சரி வா ... நான் சொல்றேன் அவர்கிட்ட... என்று சிறுவன் செல்வகணபதியை அழைத்துக் கொண்டு  திரும்பி நடக்கிறார் அம்மையார்.
நாராயணசாமி செட்டியார் மனைவியின் கோரிக்கையை ஏற்று மீண்டும் கடையில் அமர்த்திக் கொண்டார். அதிலிருந்து முதல் மாதம் ஒன்றாம் தேதி 15 ரூபாய் சம்பளம் பெற்றார் செல்வகணபதி.
செல்வகணபதி படிக்கும் காலங்களில் கூட அவர் சுயமான தேடலில்  பின் வாங்கியதில்லை. கடந்துப் போன பள்ளி நாட்களின் விடுமுறைகளில் சக மாணவர்களுடன் இணைந்து திரிந்ததில்லைதனது பெரியப்பா அண்ணாமலை செட்டியார் மிட்டாய் கடையிலும், அதே போல்  சூர்யகாந்தி  சுருட்டு கம்பெனி நடத்தி வந்த அவர் அண்ணன் கந்தசாமி செட்டியார்  வீட்டிலும் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு உதவியாக செய்து பயன்படுத்தி தொடர்ந்திருக்கிறார். செல்வகணபதி படிப்பில் இருந்து அவரின் கவனம் மெல்ல தொழில் முறை முயற்சிகளுக்கு வித்திட்டது. இளமையிலேயே ஒவ்வொன்றிலும் நுணுக்கம்  உணர்ந்தார். அப்பொழுதே  கொத்து, இஞ்சிக் கொத்துடன் கூவிக்  கூவி விற்பனை செய்தால் மாலை வரை பைசா பைசாவாக பாக்கெட் நிரம்பும். ஒரே இடத்திலும் நின்று விற்க முடியாது. போலீஸ் தொல்லையுடன் ... மற்ற வியாபாரிகளின் விரட்டுதல் என தத்தளித்து வணிகம் செய்த காலம் அது.
அலிவலம் பள்ளியில் இருந்து திருவாரூர் . சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அடியயடுத்து வைத்தவருக்கு காமராஜரின் நினைவு இன்றும் பலமாக ஆணியாய் இறங்கியிருந்தது. மூவர்ணமும் மனம் நிரம்பியிருந்ததுதி.மு.. ஆட்சி நிலவிய காலம் அது. செல்வகணபதி  சிறு வயதில் பத்திரிகைகளை புரட்டிப் படிக்கும்  பெரியவர்களின் அருகில் போய் நின்று தனக்கான தகவலை சேகரிப்பான். அவ்வளவு உணர்வு சுடர் விட்டது அவனது சிறு  உள்ளத்துக்குள்.
பள்ளி விடுமுறை நாட்களில் செல்வகணபதி  தன்னை சோம்பலுக்குள்  திணித்துக் கொண்டதில்லை.அந்தப் பிஞ்சு மனதுக்குள் குடும்பச் சுமை கூடியிருந்தது தான் காரணம். செல்வகணபதி கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு, கொத்தனார்களுக்கு  கைவேலை பார்க்கும் சித்தாளாக சென்று தனது குடும்பச் சுமைகளில் பங்கெடுத்த காலமது.
சில விடுமுறை நாட்கள் இப்படியும், சில விடுமுறை நாட்கள்  காரியாங்குடி பெரியப்பா அண்ணாமலை செட்டியார் வீட்டிலும், சூர்யகாந்தி சுருட்டு கம்பெனி உரிமையாளர் அண்ணன் எஸ். கந்தசாமி செட்டியாரின் புலிவலம் வீட்டிலும் கடந்தோடி இருக்கிறது.
அவருடைய ஒவ்வொரு சிறு விடுமுறையும் கூட அவரின் கடும் உழைப்பால் அவரது குடும்பத்தின் சிறு பொருளாதார வரவாக மாறி இருக்கிறது. சில சமயம் அப்பாவுடன் ரெங்கவிலாஸ் புகையிலை கம்பெனிக்குச் சென்று அப்பா புகையிலை பொட்டலம் மடிக்கும்போது, அவருடன் அமர்ந்து லேபிள்கள் ஒட்டியிருக்கிறான் செல்வகணபதி.
. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவனின் படிப்பு முற்றுப் பெற்று ஒன்பதாம் வகுப்புடன் வறுமையின் பொருட்டு புத்தகங்கள் பைகளுக்குள் நிரந்தரமாய் சிறைப்பட்டன. ஆனால் சிறுவன் செல்வகணபதி  சராசரியாய் சோம்பித் திரியும் மனோநிலையில் அப்பொழுது இல்லை. தன்னால் இயன்றளவு குடும்பச் சுமைகளை  தோள் மீது சுமக்கும் அவருக்குள்  கதர் குறித்த சிந்தனை கனியத் துவங்கியது. அன்றைய தினம் இளைஞர்கள் நடிகர்களையும் நாத்தீகம் பேசுபவர்களையும் சுற்றி வலம் வந்த காலங்களில், இவரின் எண்ணமெல்லாம் கதருக்குள் கனிந்து  நின்றது. காமராஜரின் கட்சிப் பணியும், காங்கிரசின் தியாக உணர்வும் செழிப்புடன் திளைத்தது.
சிறு வயது என்பது நல்ல பழக்க வழக்கங்களை விதைக்கும் பருவம் என்பதே உண்மை. அதனால தான் இளமையில் கல்  என்பது. அது செல்வகணபதிக்கும் சிறப்பூட்டியிருக்க வேண்டும். வறுமையின் சதி அது.
மென்மையான இளம் மனக்குள் உண்மையும் சத்தியமும் உறுதியினால் அது தொடர்கதையாகும் என்பது நிஜமாகி  தொடர்ந்தே நடந்தேறியது. கனவுகள் புரண்டது. அலையயன செல்வகணபதிக்குள் மெல்ல  ...மெல்ல ... அரும்பு மீசை குறும்புத் தனமாக எட்டிப் பார்த்தது மூக்கிற்கு கீழே . சுற்றித் திரிகிற காளைப் பருவமது. ஆனால் .... சுழன்றோடியது.